உள்நாடு

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்கு செல்ல பணிப்பு

(UTV | கொழும்பு) – விடுமுறை பெற்று வீடுகளுக்குச் சென்றுள்ள, களனி பல்கலைக்கழகம், யக்கல விக்கிரமாராச்சி ஆயுர்வேத கல்லூரி மற்றும் நைவல உயர் கல்வி நிறுனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, மேற்படி கல்வி நிறுவனங்களை, இன்று(05) முதல் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று(04) நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியின் 76வது ஆண்டு நினைவு தினம் இன்று

வர்த்தகர்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பாராட்டு