உள்நாடு

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் – இன்று கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – விசேட தேவையுடைய இராணுவத்தினரின் ஓய்வூதியப் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது, விசேட தேவையுடைய இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள் குறித்து அமைச்சரவை தீர்மானமொன்றை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் ஜனாதிபதி குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்தின் பாசிசவாத ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஆரம்பம் – பிரேம்நாத் சி தொலவத்த

editor

அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சோக சம்பவம்

editor

எதிர்வரும் வாரம் 2 நாட்கள் மாத்திரம் பாராளுமன்றம் கூடும்

editor