உள்நாடுபிராந்தியம்

விசேட சுற்றிவளைப்பு – உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

திரப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஞ்சிகுளம் சந்திக்கு அருகில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரப்பனை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (26) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதுடைய திரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திரப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

ஜனாதிபதி அநுரவுக்கும் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

editor

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு