உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் பவுசரை முந்தச் சென்ற வேன் டிப்பர் வாகனத்தில் மோதி கோர விபத்து – 8 பேர் காயம்

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை வேன் ஒன்றும் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த வேன் அதே திசையில் முன்னால் சென்ற பவுசர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியும் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் – பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்

editor

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

editor

சபுகஸ்கந்தயில் 23 கிலோ ஹெரோயின் மீட்பு