அரசியல்உள்நாடு

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகையில்,

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தொகை 2 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் நபர்களுக்கு ஓராண்டுக்கு குறையாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் உரிய சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மார்க்க எண் 120 பேருந்து வேலை நிறுத்தத்தில் உள்ளது

யுக்திய சுற்றிவளைப்பில் மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

editor