உள்நாடுபிராந்தியம்

வாகரை மதுரங்கேணியில் இறந்த நிலையில் யானை மீட்பு!

மட்டக்களப்பு மதுரங்கேணி குளத்திற்கு அருகாமையில் உள்ள வயல் காணியில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட் டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த யானையின் உடல் கூற்று பரிசோதனைக்காக மிருக வைத்தியர்கள் வந்து பார்வையிற்று சென்றுள்ள நிலையில் குறித்த யானையின் உடலை வனலாகா அதிகாரிகள் குறித்த யானையை அகற்றாதமையினால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிப்பதுடன், குறித்த யானையின் உடலை அப்புறப்படுத்தினால்தான் இப்போகத்திற்தான விதைப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

தபால் மூலம் இலங்கைக்கு ஜஸ்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு

எதிர்வரும் திங்கள் முதல் மின்வெட்டு அமுலாகாது