சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் இன்று பாராளுமன்றில் வைத்து சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.