வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மேயருக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் அவர்களின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னமபலம், செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளுராடசி சபைகளின் உறுப்பினர்கள் இதன்போது பிரச்சனமாகி இருந்தனர்.
இச் சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுன், வவுனியா மாநகரசபையின் செயற்பாடுகள் மறறும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தன.