அரசியல்உள்நாடு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி – மக்கள் காங்கிரஸ் , ஈபிடிபி, சைக்கிள் ஆதரவாக வாக்களிப்பு – தேசிய மக்கள் சக்தி வெளி நடப்பு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர் ,உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27.06) காலை நடைபெற்றது.

தவிசாளர் தெரிவுக்காக தமிழரசுக் கட்சியின் பாலேந்திரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கார்த்தீபன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர்.

பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது.

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப் பெற்றது.

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) 3 வாக்குகளும் ஜனநாயக தேசிய கூட்டணியின் 2 வாக்குகளும் ஈபிடிபியின் ஒரு வாக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்கும், சுயேட்சைக் குழுவின் ஒரு வாக்குமாக 17 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

வெற்றிபெறுவதற்கு 14 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 17 வாக்குகள் கிடைக்கப்பெற்ற பாலேந்திரன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது.

உபதவிசாளராக சங்கு கூட்டணியின் பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் கோணேஸ்வரி உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிசாளர் தெரிவின் போது நடுநிலமை வகித்திருந்தார்.

Related posts

சீரற்ற வானிலை – ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

editor

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

editor

திறமை வாய்ந்த கற்றறிந்த புத்திஜீவிகள் சமூகத்தை உருவாக்க 24 நிர்வாக மாவட்டங்களிலும் 24 திறந்த சமுதாய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.