அலரி மாளிகையை பார்வையிட சென்ற வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய (17) தினம் சந்தித்தார்.
இதன்போது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், கல்வி மூலம் அவர்களின் எதிர்கால அபிலாஷைகளை அடைய அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.