உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண தொழில் துறை வர்த்தக சந்தை!

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிலில் துறை வர்த்தகசந்தை வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று (26.09) இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏஇசரத்சந்திர நிகழ்வை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இச்சந்தையில் உள்ளூர் உற்பத்திகள் உட்பட 50 ற்கும் மேற்ப்பட்ட விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக நாளையதினமும் (27.09) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தொழில் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், வவுனியா மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு

சுகாதாரத்துறைசார் தொழிற்சங்கங்கள் சில பணிப்புறக்கணிப்பு