உள்நாடு

வலுக்கும் கொரோனாவும் தொடரும் முடக்கங்களும்

(UTV | கொழும்பு) – நான்கு மாவட்டங்களில், பொலிஸ் அதிகார பிரிவு ஒன்றும், ஏழு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் அதிகார பிரிவும், களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகார பிரிவின், வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய மற்றும் மாலமுல்ல கிழக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் அதிகார பிரிவின், உவர்மலை கிராம சேவகர் பிரிவு, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவின் அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின், வலப்பனை காவல்துறை அதிகார பிரிவின், நில்தண்டாஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

அஸ்வெசும திட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

இன்று காலை கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்