உள்நாடு

வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, இத்தாலியின் மிலான், பிரித்தானியாவின் இலண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைதீவின் மாலே, ஜேர்மனியின் பிராங்போர்ட், பிரான்சின் பாரிஸ், அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய விமான நிலையங்களிற்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தொடர்ச்சியாக இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் கொழும்பு, காலி அல்லது கண்டியில் உள்ள விமான அலுவலகங்களை அல்லது ஒன்லைனில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

குண்டுதாக்குதல் வழக்கிலுள்ள நெளபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள்!

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !