சூடான செய்திகள் 1

வருட இறுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-வருட இறுதி காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பிரதி பணிப்பாளர் ஆர்.ஏ.டி. கஹாட்டபிற்றிய தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த வீதியின் ஊடான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வருட இறுதிக்கால பகுதியான தற்போதைய காலத்தில் வீதி விபத்துக்களால் பெருமளவிலானவர்கள் காயமடைந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவதனால் பொது மக்கள் அவதானமாக தமது பயண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவ மனை கோரியுள்ளது.

 

 

 

Related posts

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம் [VIDEO]