உள்நாடுசூடான செய்திகள் 1

வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTV|கொழும்பு) -மேலதிக அறவீடுகள் மற்றும் தற்போதைய வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனைத்து உள்ளூராட்சி மன்ற வரி விகிதங்கள் மற்றும் கட்டண பொறிமுறைகளை ஆராய்ந்து நேற்று(19) முதல் 30 நாட்களுக்குள் அவற்றை இலகுபடுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அவர்கள் அனைத்து ஆளுநர்களுக்கும் பிரதான செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

Related posts

இன்னும் ஓர் சிரமதானம் எஞ்சியுள்ளது – அதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்போம் – கிருஷ்ணன் கலைச்செல்வி எம்.பி

editor

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பொதுப் பணிப்பாளர்