அரசியல்உள்நாடு

வன்முறையற்ற அர்த்தமுள்ள வாழ்க்கை முறைக்காக இணைந்து கொள்ளுவோம் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில் இலங்கையில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில் ஹஜ்ஜுப் பெருநாளின் உண்மையான அர்த்தத்தை ஆழமாக புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

புனித ஹஜ் யாத்திரையானது இஸ்லாத்தின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றப்படும் ஒரு கடமையாகும்.

ஒவ்வொரு இஸ்லாமியரும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய 5 கடமைகளை இஸ்லாம் மார்க்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கலிமா (இறை நம்பிக்கை) ஐவேளைத் தொழுகை, நோன்பு, சகாத் எனப்படும் தர்மவரி செலுத்துதல் மற்றும் புனித ஹஜ் பயணம் ஆகியவையாகும்.

இஸ்லாத்தின் இந்த 5 கடமைகளும் ஒருவரின் வாழ்க்கையில் கட்டியெழுப்பப்பட வேண்டிய பல்வேறு நற்குணங்களுக்கு வழிகாட்டுதலாகும்.

அமைதி, சகவாழ்வு, சகோதரத்துவம், தியாகம் மற்றும் ஆன்மீக நல்லொழுக்க வளர்ச்சி இவற்றில் முக்கியமானவையாகும்.

தற்போதைய உலகம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் சமூகத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டிய அத்துடன் மேற்கொள்ள வேண்டிய நல்ல வாழ்க்கை நெறிமுறைகளுக்கு இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதல்கள் ஒரு முன்மாதிரியாக இருப்பது தெளிவாகிறது.

இந்த மார்க்கம், இந்த வழிகாட்டுதல்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் எந்த மதத்தவருக்கும் தான் நம்பும் மதத்தின்படி தனது வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு ஒரு உதவியாக இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.

ஹஜ் யாத்திரை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது நபிகள் நாயகம் காட்டிய வாழ்க்கை நெறிக்கு ஏற்ப செயற்படுவதாகும். அத்தகைய வாழ்க்கை நெறியுடன் செயற்படும் ஒரு சமூகத்தில் மற்றொருவருக்கு எதிராக நிற்பதற்கோ அல்லது தான் நம்பும் மதத்தின்படி வன்முறையில் ஈடுபடுவதற்கோ வாய்ப்பில்லை. உண்மையான ஹஜ்ஜுப் பெருநாள் என்பது இஸ்லாமிய வழிகாட்டுதலை நன்கு புரிந்துகொண்டு முழு மகத்தான சமூகத்திற்கும் அது குறித்த செய்தியை எத்திவைப்பதாகும்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாள் நமது சமூகத்தின் ஒற்றுமை, அமைதியான சகவாழ்வுக்கு அர்ப்பணிக்கும் நாளாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

சஜித் பிரேமதாச
இலங்கை பாராளுமன்ற
எதிர்க்கட்சி தலைவர்
2025.06.07

Related posts

தேசிய பூங்காவிற்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை

161 உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகள் நாளை ஆரம்பம் தொடர்பில் வெளியான தகவல்

editor

கொட்டாஞ்சேனை OIC க்கு கொலை மிரட்டல் – சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு

editor