உள்நாடு

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – CID கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியாகின்ற போலித் தகவல்கள் மற்றும் பிரசாரங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

 06ம் தரத்துக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக அழைக்கப்படும் –  கல்வி  அமைச்சு

கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் நாமல்

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்