சூடான செய்திகள் 1

வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

(UTV|COLOMBO) சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பிரிதொரு தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

50 ரூபா பெறுமதியான தண்ணீர் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை…

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா