உள்நாடுசூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு அழைப்பு [VIDEO]

(UTV | கொழும்பு) – முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் ‘அட்மிரல் ஒப் த ப்ளீட்’ ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று(22) மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக 667 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் மீளவும் கட்டாயமாகிறது

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை