உள்நாடு

லொறி மோதி பொலிஸ் அதிகாரி பலி

(UTVNEWS | கொழும்பு) -கடமையை முடித்துக் கொண்டு வீடு சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (40 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மகர சிறைச்சாலை கைதி ஒருவர் விழுந்து உயிரிழப்பு

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் : நிமால் லன்சா

நாட்டின் சில பகுதிகளுக்கு 100 மி.மீ மழைவீழ்ச்சி