விளையாட்டு

லஹிரு குமாரவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம்…

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறுகின்ற போட்டியின் போது லஹிரு குமார பயன்படுத்திய தகாத வார்த்தைப் பிரயோகத்திற்காகவே அவருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

அதன்படி போட்டிக்கான அவரது கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒரு கரும் புள்ளி பதிவு செய்யப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியுள்ளது.

 

 

 

 

Related posts

நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி

காற்று மாசுபாடு வீரர்களின் உத்வேகத்தை குலைக்கும்

தோனியை தேர்வு செய்தவர் தற்கொலை