உள்நாடு

ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கறியலில்

(UTV|கொழும்பு)- காலி முகத்திடலில் ரஷ்ய நாட்டு பெண் ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  5 பேரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 4ஆம் திகதி இரவு குறித்த பெண் தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் காலி முகத்திடலில் இருந்த போது அங்கு வந்த சிலர் அவர்களை துன்புறுத்தி தாக்கியுள்ள நிலையில் குறித்த பெண் அதனை காணொளி பதிவு செய்துள்ளார்.

பின்னர் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

“பூஸ்டர் வேலை செய்யுமாக இருந்தால் முகக்கவசம் தேவையில்லை”

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

புத்தளத்தில் பெறுமதியான பரிசில் வழங்குவதாகக் கூறி பல இலட்சம் ரூபா மோசடி – 6 இளைஞர்கள் கைது

editor