உள்நாடு

ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிடியாணை பெறுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் எலோசியஸ், கசுன் பலிசேன, அரச கடன் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரத்சந்திர ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவல் துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் பிடியானை உத்தரவினை பெற்றதன் பின்னர் இவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் அரச சட்டத்தரணியும் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

Related posts

நாட்டில் மூடப்படும் மதுபானசாலைகள்!

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

editor

ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் ஞாயிறன்று கலந்துரையாடல்