கம்பஹா பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) இரவு ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
