வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (03) காலை மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், பின் இருக்கையில் பயணித்திருந்த 2 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது, முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதோடு, இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
