உள்நாடு

ரயிலில் மோதி 27, 32 வயதான இரு இளைஞர்கள் பலி

கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ – கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியிலும் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

Related posts

இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரிப்பு – 191 பேரை காணவில்லை

editor

திருகோணமலை பிரதான சந்தைகள், பேருந்து நிலையப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

editor