வகைப்படுத்தப்படாத

ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்

(UTV|COLOMBO)-பிரிட்டிஷ் பிரதமர் திரேஸா மே அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தனவை  இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமித்துள்ளார்.

இதற்கமைவாக ரணில் ஜெயவர்தன பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு தூதுவராக செயற்படுவார். இவர் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் இம்மாதம் 17 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். இக்காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதுடன் பிரட்டன்  மற்றும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக விடயத்திலும் கவனம் செலுத்துவார்.
ரணில் ஜெயவர்தன 2015 ஆம் ஆண்டு பிரிட்டனின் North East Hampshire  மாநிலத்திலிலருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதுடன் 2017 ஆம் ஆண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள்- புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு.

வெனிசூலாவில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

Implementing death penalty in a country with political vengeance is risky