உள்நாடு

ரஞ்சன் தொலைபேசி உரையாடல்; ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்

(UTVNEWS | COLOMBO) -பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயற்படுவதன் காரணமாக நீதிமன்றத்தின் மீதான நல்லெண்ணத்திற்கு அவப்பெயர் ஏற்படக்கூடும், குற்றமிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்று அவர் கூறினார்.

அத்துடன் தபால் திணைக்களத்தை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், முன்மாதிரியான தபால் நிலையங்கள் பல விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

IMF யின் நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை – உதய கம்மன்பில.

கொரோனா : போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்

ஜனாதிபதி அநுரவிற்கு உலக வங்கி வாழ்த்து – பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவு

editor