அரசியல்உள்நாடு

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி கல்லேல் சுமனசிறி தேரர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்ந 10 ஆம் திகதி தேரர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.

கலாநிதி கல்லேல் சுமனசிறி தேரர் தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

தான் ஏற்றுக்கொண்டுள்ள வேந்தர் பதவி எந்தவொரு தரப்பினரையும் வருத்தப்படுத்தினால் அல்லது பிளவுபடுத்தும் கருத்துக்களை உருவாக்கினால், அல்லது சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைத்தால், அந்த பதவியை விட நம்மிடையே சங்கத்தின் ஒற்றுமையையே பெரியதாகக் கருதுவேன் என்று தனது இராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் நடைபெற்ற தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா

editor

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் குறித்து தகவல் வெளியிட்ட நிசாம் காரியப்பர் எம்.பி

editor

தீப்பிடித்து சாம்பலாகிய வீடு – கோரகல்லிமடுவில் சோகம்!

editor