உள்நாடு

யூடியூப்பர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

யூடியூப்பர் உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த யூடியூப்பர் உதவி செய்யும் காணொளிகளை வலையொளி பக்கத்தில் பதிவேற்றி வந்தார்.

அவர் ஒரு வீட்டிற்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறான பின்னணியில் அவர் உட்பட நால்வர் ஞாயிற்றுக்கிழமை (09) அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2023 இல் 195 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ள ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் – அமைச்சர் சிசிர ஜயகொடி

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்