உள்நாடுபிராந்தியம்

யாழ், வாள்வெட்டுச் சம்பவத்தில் கைவிரலை இழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலை பொறுப்பாளரான இளைஞரே கைவிரலை இழந்தவராவார்.

மோட்டார் சைக்கிளில் வந்த வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சிய சாலைக்குள் அத்துமீறி நுழைந்து இளைஞர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வாள் வெட்டில் இளைஞரின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில்யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலை நடத்திய இருவரையும் பொலிஸார் இனம் கண்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

editor

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு!

குருநகரில் மினி சூறாவளி – கட்டடங்களின் கூரைகள் சேதம் – கடற்றொழில் அமைச்சர் நேரில் விஜயம்

editor