உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் புல்லுகுளத்தில் இனந்தெரியாத சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு மாலை 5:30 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உயிரிழந்தவர் யார், உயிரிழப்புக்கான காரணம் என்பது குறித்து இதுவரை தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸாரும், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

CID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

editor

டிசம்பர் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படாது-ரத்னஸ்ரீ அழககோன்

தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

editor