மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் உட்பட 3 பேரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.