மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்கள் யானையின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (13) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை ஆறாம் கட்டைப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானையின் தாக்குதலில் இளைஞர்கள் தப்பித்துக் கொண்ட போதும் இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை யானை மிதித்து துவம்சம் செய்துள்ளன.
-எச்.எம்.எம்.பர்ஸான்