உள்நாடு

மேல் மாகாணத்தில் எகிறும் கொரோனா

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 692 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 223 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன், கம்பஹா மாவட்டத்தில்119 பேரும், களுத்துறையில் 112 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,715 ஆகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நள்ளிரவு முதல் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலை நிறுத்தம்

கல்முனை விவகாரம் ஹரீஸ் MPயின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் கல்முனைக்காக குரல் எழுப்புங்கள் – ரஹ்மத் மன்சூர்

“மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்”