உள்நாடு

மேலும் 6 நோயாளர்கள் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்றுக்குள்ளான மேலும் 6 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,676 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 206 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2893 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு நிதி உதவி வழங்க IMF இனது திட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்று