உள்நாடு

மேலும் 2 டீசல் கப்பல்கள் இன்று நாட்டுக்கு

(UTV | கொழும்பு) –  மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு கப்பலில் 28,500 மெட்ரிக் டன் ஆட்டோ டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் டன் ஜெட் எரிபொருள் உள்ளது.

மற்றைய கப்பலில் 30,300 மெற்றிக் தொன் ஆட்டோ டீசலும் 7000 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் இருந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல்கள் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகின்றன.

இதேவேளை, 30 மில்லியன் டொலர் பெறுமதியான 38,400 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிச் செல்லும் கப்பலொன்றின் எரிபொருளை இறக்கி விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

நான் ஏன் தோற்றேன் என்பதை விளக்க இங்கு வரவில்லை – ரணில் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு

editor

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா