சூடான செய்திகள் 1

மொபைல் மர ஆலைகளுக்கு வருகிறது தடை

(UTVNEWS | COLOMBO) – பாரம்பரிய மர ஆலைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் மொபைல் மர ஆலைகள் தடை செய்யப்படும் என்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி முதல் மொபைல் மர ஆலைகள் தடை செய்யப்பட உள்ளது.

2014.12.03ம் திகதி 1891/26 என்ற இலக்க மர ஆலைகள் பதிவு மற்றும் சொத்து குறிகள் சம்பந்தமான விஷேட வர்த்தமானி திருத்தப்பட உள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில்

கொழும்பு மகளிர் பாடசாலைகளை மையப்படுத்தி போதை பொருள் விற்பனை

அவதானம்: 10 மாத குழந்தையின் நாக்கை கடித்த பாம்பு!