வகைப்படுத்தப்படாத

மெக்சிகோ தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

IGP’s FR petition to be considered on Sep. 17

காமினி உள்ளிட்ட மூவருக்கு பிணை

கல், மணல் மற்றும் மண் என்பனவற்றை உரிய இடங்களில் பெற்றுக்கொள்ள தடை இல்லை