உள்நாடு

மூன்று விவசாயிகளின் உயிரினை பறித்த மின்னல்

(UTV | முல்லைத்தீவு) – முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் நேற்று(15) மாலை உயிரிழந்தனர்.

தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் கடும் மழையு பெய்துள்ளதுடன், மின்னல் தாக்கமும் ஏற்பட்டிருந்தது.

இதன்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குமுழமுனை மேற்கு, குமுழமுனை மத்தி, வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதான ஆண்கள் மூவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Related posts

நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

ஐக்கிய நாடுகளின் சபையின் வதிவிடப் பிரதிநிதி சிவில் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலையில் சந்திப்பு!

தாய்லாந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் – செந்தில் தொண்டமான்!