உள்நாடுபிராந்தியம்

மூன்று இளைஞர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த சம்பவம் நேற்று (05) காலை இடம்பெற்றது.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்த சமயம், காரில் மூன்று இளைஞர்கள் இருந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, மூவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, கடலுக்குள் பாய்ந்த கார் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

Related posts

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று

புத்தாண்டு காலத்தில் அரிசியின் விலையும் உயர்கிறது