உள்நாடு

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றின் (கொரோனா) மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாவது அலை கொரோனா நாட்டில் வராமல் தடுக்க அனைத்து மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அந்த வகையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணியுமாறும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அவர கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் நேற்று பதிவான 253 கொரோனா தொற்றாளர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்

MMDA: முஸ்லிம் எம்பிக்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன ? சட்டத்தரணி ஷிபானா கேள்வி

அதானி வெளியேற்றம், பெரும் பிழை – மனோ கணேசன் எம்.பி

editor