உள்நாடுபிராந்தியம்

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல்!

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று திங்கட்கிழமை (01) பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.

மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில் தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து நீரிணைக் கொண்டு அணைத்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை,மேசை,ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

பாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor

நெடுந்தூர பேருந்து சேவைகள் ஊழியர்கள் போராட்டம் – நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்ட அங்கஜன்