உள்நாடு

முஸாதிக்காவின் வீட்டிற்கு சென்று பாராட்டிய பௌத்த மதகுரு

(UTV|திருகோணமலை) – கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்று வைத்திய துறைக்கு தெரிவான மூதூரை சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிக்காவின் வீட்டிற்கு மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும் திருகோணமலை தெவனிபியவர இந்ரா ராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன தேரர் நேற்று விஜயம் செய்தார்.

மேலும் அந்த மாணவியின் படிப்புக்கு தான் உதவி செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்

எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களை எட்டும்

மதங்களை விமர்சித்து அர்ச்சுனா சபையில் உரையாற்ற இடமளிக்கக் கூடாது – யூடியூப் ஊடாக டொலர் உழைக்க பல வழிகள் உண்டு – மரிக்கார் எம்.பி | வீடியோ

editor