முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான பொத்துவில், காரைதீவு, இறக்காம பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வும் சத்தியபிரமாண செய்யும் நிகழ்வும் இன்றைய தினம் சாய்ந்தமரு துபாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
குறித்த கூட்டத்தை பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தலைவர் வாஸித் புறக்கணித்துள்ளார்.
அவருடன், பொத்துவில் பிரதேச சபைக்கு தெரிவான முகாவின் 5 உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு தலைவர் என முகா போராளிகள் அனைவருமே புறக்கணிப்பு.