சூடான செய்திகள் 1

முழு மானை விழுங்கிய இராட்சத பாம்பு!

(UTV|COLOMBO)-கல்கிரியாகம பரவஹகம பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் இருந்து இராட்சத மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மான் ஒன்றை விழுங்கிய நிலையில் , நகர முடியாமல் மலைப்பாம்பொன்று உள்ளதாக கல்கிரியாகம வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி , குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள் , குறித்த மலைப்பாம்பினை பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

மலைப்பாம்பினால் விழுங்கப்பட்ட மானின் கால் பாம்பின் வயிற்றுப்பகுதியில் காயமேற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

வத்தளை விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்