உள்நாடு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் கரை ஒதுங்கிய படகு

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் நாட்டுப்படகு ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் 25 மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நாட்டுப்படகு இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் – மனிதாபிமான ரீதியாக கூறுகிறேன் – ரணில் விக்ரமசிங்க

editor

கண் பார்வை குறைபடை தடுக்க வைத்தியர்கள் விசேட அறிவுரை!