அரசியல்உள்நாடு

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் உள்ளிட்ட பிரதேசங்கள் பலவற்றை சேர்ந்த பிரதேச அரசியல் தலைவர்கள் பலர் இன்று (27) சர்வஜன அதிகாரத்தில் இணைந்தனர்.

அக்கட்சியின் அலுவலக வளாகத்தில் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர முன்னிலையில் அவர்கள் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அந்த மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் புதல்வர் அஞ்சன திஸாநாயக்க மற்றும் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதேச அரசியல் பிரதிநிதிகள் குழுவும் இன்று சர்வஜன அதிகாரத்தில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டனர்.

Related posts

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

editor

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

ISIS அமைப்பிற்கு ஆதரவளித்த இலங்கையர்கள் : அமெரிக்கா குற்றச்சாட்டு