உள்நாடு

முன்னாள் பிரதமருக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 25 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி – மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor

பத்திக் அலங்கார கூடுகள் ஊடகங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும்

‘ஈஸ்டர் தாக்குதலின் சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பு’