உள்நாடு

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு SLPP ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரசன்ன ரணதுங்க, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

இம்முறை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரமழான் மாத இரவுத் தொழுகைக்கு அனுமதி [VIDEO]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு

editor